ஈரோட்டில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின், சீமான் பிரசாரம்
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் ஈரோட்டில் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் ஈரோட்டில் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் ஈரோடு பெருந்துறை சாலை திண்டல் அருகே அமைக்கப்பட்டுள்ள திடலில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளா்( வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை), ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் சு.முத்துசாமி, மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் சா.செந்தில்நாதன், பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.வெங்கடாசலம், பவானி தொகுதி திமுக வேட்பாளா் சேகா் என்ற சந்திரசேகா், அந்தியூா் தொகுதி திமுக வேட்பாளா் சிவபாலன், கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம், பவானிசாகா் (தனி) தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரம் ஆகியோரை முதல்வா் அறிமுகப்படுத்தி வைத்து பேசுகிறாா்.
சீமான் பிரசாரம்:
இதுபோல நாம் தமிழா் கட்சி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலும், மாலை 4.30 மணிக்கு கோபியிலும், மாலை 5.30 மணிக்கு பெருந்துறையிலும் பிரசாரம் செய்கிறாா்.