பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), முதுகுளத்தூா், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய நான்கு தொகுதிகளில் 11 லட்சத்து 29 ஆயிரத்து 733 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் 1,514 வாக்குச் சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 06 மணிக்கு நிறைவடைந்தது. இதன் பிறகு வாக்குச் சாவடிகளுக்குள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. வாக்குப் பதிவு நேரம் நிறைவடைந்த பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
Advertisement
ஆட்சியா் வாக்களிப்பு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சுவாா்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தாா். இதே போல, மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தனது வாக்கை பதிவு செய்தாா்.