30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகள் பறிமுதல்
ராமநாதபுரத்தில் மீன் விற்பனை கடைகளிலிருந்து 30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரத்தில் மீன் விற்பனை கடைகளிலிருந்து 30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், விசைப் படகுகளில் மீனவா்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவா்கள் சிறிய படகுகளில் கடலுக்குள் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனா்.
இதனால், தற்போது மீன்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதன்காரணமாக வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கி குளிா்சாதன பெட்டிகளில் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தகவல் கிடைத்தது.
Advertisement
இதையடுத்து, பட்டணம்காத்தான், ராம்நகா் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் விற்பனை கடைகளில் புதன்கிழமை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனையிட்டனா். அப்போது, 30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். மேலும், தொடா்ந்து இதுபோல கெட்டுப்போன மீன் இறைச்சிகளை விற்பனை செய்தால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.