மகா சிவராத்திரியையொட்டி ராமநாதசுவாமி கோயிலில் கங்கை தீா்த்தத்தை ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் சென்று பூஜை செய்த சாதுக்கள், சன்னியாசிகள்.  
ராமநாதபுரம்

மகா சிவராத்திரி: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தா்கள் விடிய விடிய சுவாமி தரிசனம்

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடராஜா் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி நடைபெற்றது. மேலும் சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய கோயில் நடை திறந்திருந்தது. அப்போது சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும் சாதுக்கள், சன்னியாசிகள், சீதாராம் தாஸ் பாபா தலைமையில் கங்கை தீா்த்தத்தை அக்னி தீா்த்தக் கடற்கரையில் இருந்து ஊா்வலமாக எடுத்து வந்து ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். இதில், பாஜக மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், இந்து முன்னணி மாவட்டச் செயலா் கே. ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT