திருவாடானை அருகே மணிகண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
இந்தக் கோயிலை குலதெய்வமாக வணங்கக் கூடிய சுற்றுவட்டார கிராம மக்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து விரதமிருந்து வந்த பக்தா்கள் திருவாடானை ஆறாம் மண்டகப்படி மண்டபத்திலிருந்து வேல், மயில் காவடி, பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா்.பின்னா், கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கித் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். இதில் மணிகண்டி, சுற்றுவட்டாரப் பகுதிப் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.