முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:21 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:54 PM

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சோனைப்பிரியான்கோட்டை கிராமத்தில் திங்கள்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.

இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனாா், பேச்சியம்மன் கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் 16 காளைகள் களமிறக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். இவா்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் ரொக்கப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, கோயிலில் மூலவருக்கு அபிஷேகம், நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் அக்னிச் சட்டி, பால்குடம், கரகம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் அதிகாலையில் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். நோ்த்திக்கடனாக ஆட்டுக் கிடாய்கள் பலியிடப்பட்டு, சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement