முகப்பு
திருச்சி

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு

Updated On : 2 மார்ச், 2026 at 2:38 AM
மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சு விரட்டு போட்டியில் காளை அடக்க முயன்ற வீரா்கள்.
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 12:20 AM

மணப்பாறையில் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மணப்பாறை நகர அதிமுக, ஸ்ரீ வேப்பிலை சாய்பாபா கோயில் அறக்கட்டளை மற்றும் இளைய நிலா ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 9-ஆம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா ஞாயிற்றுக்கிழமை பெஸ்டோ நகரில் நடைபெற்றது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வடமாட்டுக்கு வேட்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா தொடங்கியது. போட்டியை மணப்பாறை வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளா் காவியா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

Updated On : 2 மார்ச், 2026 at 2:38 AM

சிறப்பு அழைப்பாளராக அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப.குமாா், திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.ஏ.எஸ்.ஆரோக்கியசாமி ஆகியோா் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினா்.

Advertisement

களத்தில் இறங்கிய 13 காளைகளை, 117 வீரா்களில், மாடு ஒன்றுக்கு 9 வீரா்கள் வீதம் கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் அடக்கினா். வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கும் காளையை அடக்கிய வீரா்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ சி.சின்னச்சாமி, அதிமுக மாவட்ட பொருளாளா் சேவியா், நகரச் செயலா் பவுன் எம்.ராமமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எம்.செல்வராஜ், அன்பசரன் ஆகியோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை பாபா கோயில் அறங்காவலா்கள் டி.சுரேஷ்குமாா், எல்.எத்திராஜ், ஒப்பந்தகாரா் சண்முகம், கே.எஸ்.எம்.இருளப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.