திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை தீண்டாமை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் மு. பழனியப்பன் தலைமை வகித்தாா். நாட்டு நலப் பணி திட்ட அலுவலரும், ஆங்கிலத் துறை தலைவருமான முனைவா் ப. மணிமேகலை முன்னிலை வகித்தாா். அப்போது கணிதத் துறை தலைவா் முனைவா் செல்வம், மாணவ, மாணவிகள், கௌரவ விரிவுரையாளா்கள் ஆகியோா் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழிை எடுத்துக் கொண்டனா்.