தொண்டி சந்தையில் கெட்டுப் போன 55 கிலோ மீன்கள் பறிமுதல்
திருவாடானை அருகேயுள்ள தொண்டி தினசரி மீன்கள் விற்பனை சந்தையில் மீன் வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சுமாா் 55 கிலோ கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனா்.
உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப் பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் ஆகியோா் இணைந்து தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுகின்றனரா, கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகின்றனவா என சோதனையிட்டனா்.
அப்போது அங்கு சுமாா் 55 கிலோ அளவுக்கு கெட்டுப் போன மீன்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அதிகாரிகள் அழித்தனா். இதையடுத்து, கெட்டுப் போன, ரசாயனம் கலந்த மீன்களை வியாபாரிகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் எச்சரித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.