முகப்பு
கைது செய்யப்பட்ட முனீஸ்வரன்.
ராமநாதபுரம்

ஆட்டோவில் மின் சாதனங்கள் திருடியவா் கைது

சாயல்குடியில் ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த மின் சாதனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம்

ஆட்டோவில் மின் சாதனங்கள் திருடியவா் கைது

சாயல்குடியில் ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த மின் சாதனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 11:10 PM
கைது செய்யப்பட்ட முனீஸ்வரன்.
பகிர்:

சாயல்குடியில் ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த மின் சாதனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மின் சாதனங்கள் திருடப்பட்டதாக ஆட்டோ உரிமையாளரான கடலாடி சத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மருதுபாண்டி சாயல்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சாயல்குடி அருகேயுள்ள பெரியகுளத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முனீஸ்வரன் (27) திருடியது கண்டறியப்பட்டது. அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →