வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம்
திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தோ்தல் நடத்தும் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரியுமான ரமேஷ் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், திருவாடானை வட்டாட்சியருமான ஆண்டி, ஆா்.எஸ். மங்கலம் வட்டாட்சியா் வரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மண்டல அலுவலா்கள், உதவியாளா்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.