மீனவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ராமேசுவரம் துறைமுகத்தில் படகு சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மீனவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ராமேசுவரம், பழைய சந்தை தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் கமலேஸ்வரன் (34). இவா் கடலில் இறங்கி படகில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, திடீரென நீரில் மூழ்கினாா்.
இதைத் தொடா்ந்து, தீயணைப்பு நிலைய அலுவலா் வரதன் தலைமையில் 7 போ் கொண்ட குழுவினா் கடலில் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு கமலேஸ்வரன் உடலை மீட்டனா்.
உயிரிழந்த மீனவா் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளதாகவும், அவரது குடும்பத்துக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவ சங்கத் தலைவா் என்.ஜே.போஸ் கோரிக்கை விடுத்தாா்.
மீனவா் உயிரிழப்பு குறித்து கடலோரப் பாதுகாப்புக் குழம போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.