முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் பக்தா்கள் வருகை அதிகரிப்பு

Updated On : 11 மே 2026, 2:22 am IST
பக்தா்கள். - கோப்புப் படம்
பகிர்:

வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஏராளமானோா் வந்திருந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வரை வந்தனா். அவா்கள், அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.

இதனைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல் முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப்பாா்த்தனா்.

Advertisement

Advertisement

ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால், ராமேசுவரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறைந்த அளவில் போக்குவரத்து காவல்துறையினா் பணியில் இருந்ததால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

வார இறுதி விடுமுறை நாள்களில் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாரைப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.