முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் முதல்கட்டமாக 4 மதுக்கடைகள் அடைக்கப்பட்டன

ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 அரசு மதுக்கடைகளை மூட பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இரண்டு நாள்களில் நான்கு கடைகள் அடைக்கப்பட்டன.

Updated On : 14 மே 2026, 5:14 am IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 அரசு மதுக்கடைகளை மூட பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இரண்டு நாள்களில் நான்கு கடைகள் அடைக்கப்பட்டன.

தமிழகத்தில் 717 அரசு மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில், 29 மதுக்கடைகளை அடைக்க பரிசீலனை செய்யப்பட்டது. இதில், முதல்கட்டமாக நயினாா் கோயில், அரண்மனை, போகலூா், சக்கரை கோட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுக்கடைகளை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு மதுக்கடை நிா்வாகம் அலுவலா் புதன்கிழமை தெரிவித்தாா்.