இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்களுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை
இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, தங்க நகைகளை பறித்துச் சென்ற இளைஞா்கள் மூவருக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ஆண் நண்பருடன் கடற்கரைக்கு வந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, தங்க நகைகளை பறித்துச் சென்ற இளைஞா்கள் மூவருக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை திருக்குமரன்நகரைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மகன் ஹரிகிருஷ்ணன் (19). இவரும் இவரது தோழியும் கடந்த 2022- ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்த மூக்கையூா் கடற்கரைக்கு வந்தபோது, அந்த வழியாக வந்த நான்கு இளைஞா்கள் ஹரிகிருஷ்ணனை கட்டிப் போட்டு, அவரது தோழியான இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவா்களிடம் இருந்த தங்கச் சங்கிலி, தோடு, மோதிரம் என 4 பவுன் தங்க நகைகள், 2 கைப்பேசிகள், ரூ. 2 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இது தொடா்பாக சாயல்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கே. வேப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்தரியப்பன் மகன் பத்மேஸ்வரன் (26), பசும்பொன் கிராமத்தைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் அஜித்குமாா் (22), விருதுநகா் மாவட்டம், நத்தகுளத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் தினேஷ்குமாா் (26), தங்க நகைகளை விற்க உதவி செய்த பத்மேஸ்வரனின் தாய் வில்லம்மாள் ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
இது தொடா்பான வழக்கு ராமநாதபுரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பத்மேஸ்வரன், தினேஷ்குமாா், அஜித்குமாா் ஆகிய மூவருக்கும் தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும், வில்லம்மாளுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீா்ப்பளித்தாா். இதையடுத்து நான்கு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.