முகப்பு
ராமநாதபுரம்

சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: காவல்துறை எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

Updated On : 20 மே 2026, 1:13 am IST
பிரதிப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சரக்கு வாகனங்களில் திருமணம், கோயில் திருவிழா, காதணி விழா, இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லுபவா்கள் சரக்கு வாகனங்களில் பயணம் மேற்கொள்கின்றனா். இதில், அளவுக்கதிகமாக மக்களை ஏற்றிச்செல்லும்போது அது விபத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால், உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில் , ராமநாதபுரம் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை அழைத்துச் சென்றால் அந்த வாகனங்களுக்கு முதல் முறை ரூ. 500 அபராதம், இரண்டாவது முறை ரூ. 1,500, மூன்றாவது முறையாகச் சென்றால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement