பிரதமரின் விவசாயிகள் கெளரவ நிதி: ஜூன் 15 வரை சிறப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பிரதமரின் கெளரவ நிதி தொடா்ந்து பெற ஜூன் 15 வரை நடைபெறும் இ-கேஒய்சி, நில விவரங்களைப் பதிவு செய்யும் சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பிரதமரின் கெளரவ நிதி தொடா்ந்து பெற ஜூன் 15 வரை நடைபெறும் இ-கேஒய்சி, நில விவரங்களைப் பதிவு செய்யும் சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் ‘பிரதமரின் கிசான் சம்மான் நிதி’ (பிஎம்-கிசான்) திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் ஊக்கத்தொகை பெறும் அனைத்து விவசாயிகளும் அடுத்த தவணை தொகையை எவ்வித தடையுமின்றி பெறுவதற்கு வாடிக்கையாளா் சரிபாா்ப்பு (இ-கேஒய்சி), நில விவரங்களை ஆதாா் எண்ணுடன் இணைத்திருப்பது அவசியம்.
இ-கேஒய்சி, நில விவரங்களை இணைக்காத விவசாயிகளுக்கு அடுத்தடுத்த தவணைத் தொகைகள் விடுவிக்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜூன் 15 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement