மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது
மண்டபத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மண்டபத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராவுத்தரப்பா தா்ஹா பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் உதவி ஆய்வாளா் முத்து முனியசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் மது விற்பனை செய்து கொண்டிருந்த கருப்பசாமியை (67) கைது செய்தனா். அவரிடமிருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.