முகப்பு
ராமநாதபுரம்

முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள தலைவநாயக்கன்பட்டி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 மே 2026, 1:46 am IST
தலைவநாயக்கன்பட்டி முத்துமாரியம்மன் கோயில் கோபுரக் கலசத்தில் புனிநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்கள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள தலைவநாயக்கன்பட்டி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், பொதுமக்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம், இளநீா் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement