முதுகுளத்தூரிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை
முதுகுளத்தூா் பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் 36-ஆவது ஆண்டாக செவ்வாய்க்கிழமை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டனா்.
முதுகுளத்தூா் பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் 36-ஆவது ஆண்டாக செவ்வாய்க்கிழமை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள கிடாத்திருக்கை கிராமம், அதைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து 150-க்கு மேற்பட்ட திருச்செந்திலாண்டவா் பாதயாத்திரை காவடி சேவைக் குழு பக்தா்கள் குருநாதா் போஸ்பாண்டிசாமி தலைமையில் காவடி எடுத்து, கையில் வேல் ஏந்தி, முருகக் கடவுளின் பஜனை பாடல்கள் பாடியவாறு, பாதயாத்திரை பயணத்தை தொடங்கினா்.
இந்த பக்தா்களை கிராமப் பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று காவடியைத் தொட்டு வணங்கி, வழி அனுப்பி வைத்தனா். இந்த பாதயாத்திரை குழுவினா் திருச்செந்தூரில் மே 30 -ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement