சிவகங்கை

மானாமதுரை பகுதியில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில், அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலாமாண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
      மானாமதுரையில் பழைய பேருந்து நிலையம் முன்பு கூடிய அதிமுகவினர், மௌன ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியே 
வந்தனர். இதில், அதிமுக ஒன்றியச் செயலர் எம். குணசேகரன், நகரச் செயலர் விஜி.போஸ், கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னைமாரியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் 
தொண்டர்கள் கலந்துகொண்டனர். 
மானாமதுரையில் அனைத்து வார்டுகளிலிலும் கட்சியினர் ஜெயலலிதா உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 14 ஆவது வார்டில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில், அதிமுக வினர் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இளையான்குடி நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் அதிமுகவினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மௌன ஊர்வலமும் சென்றனர். இதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்புவனம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் அதிமுகவினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT