தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலாள கலையருவிப் போட்டிகள் காரைக்குடி மு.வி. அரசு மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றன.
இப்போட்டிகளை தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்து துவக்கிவைத் தார். ஓவியம், பாடல், இசைக்கருவி, மொழித்திறன் ஆகிய பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் கல்வி மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் ஏற்கெனவே நடத்தப்பட்டு முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் சு. சீதாலெட்சுமி மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரிகள், மு.வி பள்ளியின் ஆசிரியர்கள் பலரும் செய்திருந்தனர்.