சிவகங்கை

தற்கொலை செய்தவரின் சடலம் எரிப்பு: மனைவி, மகன் உள்பட 5 பேர் மீது வழக்கு

DIN

சிவகங்கை அருகே தற்கொலை செய்து கொண்டவரின் சடலத்தை, காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்ததாக அவரது மனைவி, மகன் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
   சிவகங்கை அருகே உள்ள கண்டாங்கிபட்டியைச் சேர்ந்தவர் எழுமலை (65). இவர்,  சில தினங்களுக்கு முன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். ?இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காமல், குடும்பத்தினரும், உறவினர்களும் அவரது சடலத்தை எரித்துவிட்டனராம்.    இது குறித்து கண்டாங்கிபட்டி கிராம நிர்வாக அலுவலர் கமலதாசன் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை தாலுகா போலீஸார் எழுமலையின் மனைவி வீராயி, மகன் சக்திவேல் மற்றும் உறவினர்களான நாகராஜ், முத்து, பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT