முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் 14 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மானாமதுரை அருகேயுள்ள கொம்புக்காரனேந்தல் கிராமத்திலுள்ள அவரது நினைவிடத்தில், திமுக மாவட்டச் செயலர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் அக் கட்சியினர் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர்.
இந் நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தென்னவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ராமையா, மாவட்ட துணைச் செயலர் சேங்கைமாறன், இளையான்குடி ஒன்றியச் செயலர் சுப. மதியரசன், மானாமதுரை ஒன்றியச் செயலர் ராஜாமணி, நகரச் செயலர் பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், மாவட்டம் முழுவதுமிருந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வந்து நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.