சிவகங்கை

சிவகங்கையில் அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பி.குமார் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.குணசேகரன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர்  எல்.ஆதிமூலம்  ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 
          இதில்,உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் , மத்திய, மாநில  அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். 
  ஆர்ப்பாட்டத்தில்,தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT