சிவகங்கை

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

DIN

சிவகங்கை அருகே பில்லூரில் உள்ள வேதமுடைய அய்யனார், முத்தையா சுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. 
  இவ்விழாவை முன்னிட்டு வேதமுடைய அய்யனார், முத்தையா சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து,புதன்கிழமை மதுரை-சிவகங்கை சாலையில் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. 
இதில், சிவகங்கை,ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு, சின்ன மாடு நிலையில் 25 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT