திருப்பத்தூரில் சாலை விபத்தில் இளைஞர் சாவு
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பொக்லைன் இயந்திரம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பொக்லைன் இயந்திரம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அருகே தம்பிபட்டி காளையப்பா நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் தினேஷ்குமார்(,22) மற்றும் இளங்கோ மகன் தினேஷ்குமார்(18) ஆகியோர் எலெக்ட்ரீசியன் வேலை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி சென்றனர். கும்மங்குடிப்பட்டி அருகே செல்கையில் ஊர்குளத்தான்பட்டி விலக்கு சாலையிலிருந்து காரைக்குடி சாலையில் திரும்பிய பொக்லைன் இயந்திரம் மீது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி மகன் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்புறம் அமர்ந்திருந்த மற்றொரு தினேஷ்குமார் பலத்த காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து நாச்சியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.