சிவகங்கை

காரைக்குடியில் 21-ம் ஆண்டு கலைஞர் விழா

DIN

காரைக்குடியில் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 21-ம் ஆண்டு கலைஞர் விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
 பாண்டியன் திரையரங்கத்திடலில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
 பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்புரையாற்றினார். முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி, தொழிலதிபர் பிஎல். படிக்காசு, திமுக மாவட்டப் பொருளாளர் சுப.துரைராஜ், காரைக்குடி முன்னாள் நகர்மன்றத் தலைவர் சே.முத்துதுரை உள்ளிட்ட பலர் பேசினர். 
கலைஞர் தமிழ்ச்சங்க நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான மு.தென்னவன் வரவேற்றார். நகரச் செயலாளர் நா. குணசேகரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT