காரைக்குடியில் பலத்த காற்றுடன் மழை: மரங்கள் முறிந்து விழுந்து மின்விநியோகம் பாதிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில், மின்நிலையத்தில் மரங்கள் முறிந்து விழுந்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில், மின்நிலையத்தில் மரங்கள் முறிந்து விழுந்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை பிற்பகல் வரை நகரில் வெயில் நிலவியது. மாலை 4 மணியளவில் கருமேகம் திரண்டு, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த காற்றால், காரைக்குடி கழனிவாசல் மின் நிலையத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, கல்லூரிச் சாலை, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் இரவு 7.45 மணிக்கே மின்விநியோகம் கிடைத்தது. மற்ற பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், நகரே இருளில் மூழ்கியது.
இதனிடையே, மின்வாரியப் பணியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக மரங்களை அப்புறப்படுத்தி, மின் விநியோகம் வழங்கி வருகின்றனர். மின்வாரியப் பணியாளர்கள் தொடர்ந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மின்வாரியப் பொறி யாளர்கள் தெரிவித்தனர்.