சிவகங்கை

சித்தலக்குண்டில் விவசாயிகள் சங்கக் கூட்டம்

DIN

மானாமதுரை ஒன்றியம் சித்தலக்குண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டு அதன் முதல்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சுந்தர்ராசு தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ஆறுமுகம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் சங்கையா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் முருகேசன், கட்சி கிளைச் செயலர் பாலு உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.விவசாயிகள் சங்கத்தின் சித்தலக்குண்டு கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர்- சுப்பிரமணியன், உதவித் தலைவர்- சுந்தர்ராசு, செயலர்- பி.சங்கு, உதவிச் செயலர்- வி.சங்கு, பொருளாளர்- பாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் சித்தலக்குண்டு பகுதியில் விவசாயப் பணிக்கு வேளாண்மைத்துறை சார்பில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்துதர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT