சிவகங்கை

இயந்திரக் கோளாறு: காரைக்குடியிலிருந்து 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட பல்லவன் ரயில்

DIN

காரைக்குடியிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் பல்லவன் ரயில் இயந்திர  கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை காரைக்குடியிலிருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து திருச்சி வழியாக சென்னைக்கு தினசரி அதிகாலை 5.05 மணிக்கு பல்லவன் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.05 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், என்ஜின் பழுதடைந்ததால் இயக்கப்படவில்லை.  இதையடுத்து, திருச்சியிலிருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு அதன்பின்னர் சுமார் காலை 7.40 மணியளவில் பல்லவன் ரயில் புறப்பட்டுச் சென்றது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் புறப்பட தாமதமானதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT