சிவகங்கையில் நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
சிவகங்கையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது.
சிவகங்கையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிவகங்கை கோட்டத்துக்குட்பட்ட மின்நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், சிவகங்கை கோட்டத்துக்குட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.
அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.