மானாமதுரையில் இலங்கை அகதியை சனிக்கிழமை பாட்டிலால் குத்திய மற்றொரு அகதியை போலீஸார் கைது செய்தனர்.
மானாமதுரை அருகே மூங்கில்ஊருணியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தேவராஜ் மகன் கஜேந்திரன் (23) வசித்து வருகிறார். இவருக்கும் இதே முகாமில் வசிக்கும் மருது மகன் புஷ்பராஜ் (19) என்பவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் முகாமுக்கு பின்னால் உள்ள பனிக்கனேந்தல் கண்மாயில் கஜேந்திரன், புஷ்பராஜ் இருவருக்கும் மீண்டும் தகறாறு ஏற்பட்டுள்ளது. அப்போது புஷ்பராஜ் உடைந்த பாட்டிலால் கஜேந்திரனை கழுத்தில் குத்தினார். இதில் அவருக்கு கழுத்து நரம்பு அறுபட்டது. இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து புஷ்பராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.