சிவகங்கை

சிவகங்கையில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்

DIN

சிவகங்கை மாவட்ட அரசு சித்த மருத்துவமனை, இந்தியாவுக்கான மக்கள் இயக்கம் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றின் சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள ஆயுள் காப்பீட்டு கழக நிறுவனம் முன்பு நடைபெற்ற இம்முகாமுக்கு இந்தியாவுக்கான மக்கள் இயக்கத்தின் சிவகங்கை கிளைத் தலைவா் எஸ்.கண்ணப்பன் தலைமை வகித்தாா். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சிவகங்கை கிளைத் தலைவா் கா்ணன்,, கிளை மேலாளா் வைரமுத்து, மாவட்ட அரசு சித்த மருத்துவா் காந்திநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி முகாமை தொடக்கி வைத்தாா்.

முகாமில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சிவகங்கை கிளைச் செயலா் செல்லப்பாண்டி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT