சிவகங்கை

சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு

DIN

கீழச்சிவல்பட்டியில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள ஸ்ரீ ராஜா வித்ய விகாஸ் பள்ளி மாணவர்களுக்கு  திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கீழச்சீவல்பட்டி உள்ள மெய்யப்பச்செட்டியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 9) நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராஜா வித்ய விகாஸ் பள்ளியிலிருந்து 10 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆறாம்வகுப்பு மாணவர் அகிலன், 2 ஆம் வகுப்பு மாணவர் ஏகன் இருவரும் தங்கப் பதக்கம் வென்றனர். 6 ஆம் வகுப்பு மாணவர் மாதேஷ் விசுவநாதன், 4-ஆம் வகுப்பு மாணவி ஹர்சினி, 2-ஆம் வகுப்பு மாணவர் யுவன் சேதுக்கரசு ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 6 ஆம் வகுப்பு மாணவர் வேலன் பாலாஜி, 4-ஆம் வகுப்பு மாணவர் வடிவரசன், 6-ஆம் வகுப்பு மாணவர் திருப்பொற் கணேஷ், 3-ஆம் வகுப்பு மாணவர்கள் யாஷ், ஜெய்கிருத்திக் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
பதக்கங்கள் வென்ற மாணவர்களை கிட் அன்ட் கிம் கல்விக்குழுமத் தலைவரும், பள்ளியின் தலைவருமான வீ. அய்யப்பன் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்களும் மாணவர்களைப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT