சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தண்ணீர்வயல் சா.முத்துமாணிக்கம் அம்பலம் என்பவரின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் 2 ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, குதிரை வண்டி பந்தயம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
குதிரை வண்டிப் பந்தயமானது, கண்டதேவி தேரோடும் வீதியை 10 முறை சுற்றி வரவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. இதில், 9 குதிரை வண்டிகள் கலந்துகொண்டன. முதலிடத்தை காளையார்கோவில் வண்டியும், இரண்டாம் இடத்தை தேனி வண்டியும், மூன்றாம் இடத்தை ஈரோடு பவானி வண்டியும் வென்றன.
இப்போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, தேவகோட்டை வேலுநாச்சியார் குதிரை வண்டி பந்தயக் குழு செய்திருந்தனர்.