சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN


பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஜனநாயக மருத்துவர் சங்கத்தின் சிவகங்கை கிளைத் தலைவர்  நாச்சியப்பன் தலைமை வகித்தார். பட்டமேற்படிப்பு  மருத்துவர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் கிருபாகரன், ஜனநாயக மருத்துவர் சங்கத்தின் கிளைச் செயலர் பிரசன்னக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பணிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT