சிவகங்கை

காளையார்கோவிலில் முத்துவடுகநாதரின் குருபூஜை விழா

DIN

சிவகங்கையை ஆட்சி செய்த மன்னர் முத்துவடுகநாதரின் 247-ஆவது குரு பூஜை விழா, காளையர் கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  காளையார்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநிலச் செயலர் எஸ்.ஆர். தேவர், பாஜகவின் கோட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் காளையார்கோவிலில் உள்ள காளையீசர் சுவாமி கோயிலில் உள்ள முத்துவடுகநாதரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  அதன்பின்னர், ஊர்வலமாக வந்து அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இதையடுத்து, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இதில், காளையார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT