சிவகங்கை

இறந்தவர் பெயரில் உள்ள நிலத்தைவிற்பனை செய்தவர் கைது

DIN


மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (70). இவருடைய சகோதரி ஆனந்தவல்லிக்கு சிவகங்கை மாவட்டம் குவளைவேலியில் சொந்தமாக 3 ஏக்கர் 6 சென்ட் புஞ்சை நிலம் இருந்ததாம்.  இந்நிலையில் ஆனந்தவல்லி கடந்த 27-7-1976 இல் இறந்து விட்டாராம்.
இதையடுத்து குவளைவேலி கிராமத்தைச் சேர்ந்த பாரி (51) தன்னுடைய தாயாரான அக்கம்மாள் (76) ஆகிய இருவரும் சேர்ந்து போலியாக பத்திரம், பட்டா தயார் செய்து சிவகங்கை பொற்கைபாண்டியன் தெருவைச் சேர்ந்த மல்லிகா  என்பவருக்கு அந்த நிலத்தை விற்பனை செய்து விட்டனராம்.
இதுபற்றி தகவலறிந்த ஜெயலெட்சுமி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரனிடம்  அண்மையில் புகார் செய்தார். எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து பாரியை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT