சிவகங்கை

தாயமங்கலம் கோயில் திருவிழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

DIN

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலம் சார்பில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக் கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி மண்டலப் பொதுமேலாளர் செல்வகோமதிகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:   தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஏப்ரல் 2- ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமானோர் வருகை தருவர். 
 இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக மதுரை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, காளையார்கோவில், இளையாங்குடி மற்றும் அருப்புக் கோட்டை உள்ளிட்ட ஊர்களிலிருந்து தாயமங்கலத்துக்கு ஏப்ரல் 2 முதல் 7 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT