சிவகங்கை

பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பாஜக மாநில நிர்வாகிக்கு வெள்ளிக்கிழமை வந்த கொலை மிரட்டல் கடிதம் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. 
திருப்புவனம் வெள்ளாளர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சிவா.செல்வராஜ். இவர் பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு செயலாளராக உள்ளார். பல்வேறு இடங்களுக்கும் சென்று அக்கட்சியின் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். இந் நிலையில் இவரது வீட்டுக்கு தேனியிலிருந்து தபாலில் அனுப்பப்பட்ட  கடிதம் ஒன்று வெள்ளிக்கிழமை வந்துள்ளது. அதில் பாஜகவை வளர்ப்பதாக நினைத்து ஒரு தரப்பு சமுதாய மக்களையும் சமுதாயத் தலைவர்களையும் கேவலமாகப் பேசுவதை அனுமதிக்க மாட்டோம்.  தேர்தலுக்குள் உன்னை கொலை செய்வோம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT