சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி, திருமலை, அழகமாநகரி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 2) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதனால் மதகுபட்டி, திருமலை, அழகமாநகரி, கீழப்பூங்குடி, வீரபட்டி, ஏரியூர், மேலமங்களம், கீழமங்களம், பிரவலூர், பர்மாகாலனி, சிங்கினிபட்டி, தச்சம்பட்டி, ஆபத்தாரன்பட்டி, அரளிக்கோட்டை, நாமனனூர், ஒக்கூர், காடனேரி, அலவாக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.