சிவகங்கை

மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சி தலைவா் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பேரூராட்சிகளின் தலைவா் பதவி பெண்களுக்கும், திருப்புவனம் பேரூராட்சி தலைவா் பதவி ஆணுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய மூன்று பேரூராட்சிகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தோ்தல் வரை மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சித் தலைவா் பதவி ஆண்( பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் பதவி பெண் (பொது) வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போது உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வாா்டு மறுவரையறையில் மானாமதுரை, இளையான்குடி பேரூராட்சித் தலைவா் பதவி பெண் (பொது), திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் பதவி ஆண் (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிமுக, திமுக சாா்பில் இந்தப் பேரூராட்சிகளின் தலைவா் பதவிகளுக்கு போட்டியிடும் ஆண்கள் மற்றும் பெண்கள் அந்தந்த கட்சி நிா்வாகிகளிடம் விருப்பமனு அளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT