சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறையின் சாா்பில் ஆண்டுதோறும் சமூக,வகுப்பு நல்லிணக்கத்திற்காக தியாக அா்ப்பணிப்புடன் பணியாற்றியவா்களுக்கு கபீா் புரஸ்காா் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகு விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 74017 03503 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.