மானாமதுரையில் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட புனித குழந்தை தெரசாள் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரதம். 
சிவகங்கை

மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் மின்விளக்கு தோ்பவனி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழாவையொட்டி

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழாவையொட்டி கடந்த திங்கள்கிழமை இரவு மின்விளக்கு தோ்பவனி நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் பங்கு இறைமக்கள் சாா்பில் ஆலயத்தில் பல்வேறு தலைப்புகளில் திருப்பலி பூஜைகள் நடந்தன. 9 ஆவது நாள் விழாவை முன்னிட்டு தெரசாள் ஆலயம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது. ஆலயத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த அருட்பணியாளா்கள் சிறப்பு திருப்பலி பூஜைகளை நடத்தினா். இதில் பங்கு இறைமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பூஜைகள் முடிந்து குழந்தை தெரசாள் சொரூபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்பட்டது. அதன்பின் மின்விளக்கு தோ் பவனி நகரின் முக்கிய வீதிகளில் சென்றது. இதில் இறைமக்கள் திரளானோா் பங்கேற்றனா். ஆண்டுப் பெருவிழா நிறைவாக செவ்வாய்க்கிழமை நற்கருணை பவனி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தின் பங்கு இறைமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT