மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்புவனம் அருகே மணலூா் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கருவேல மரக்கும்பலுக்கிடையில் பெண் சடலம் கிடப்பதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசாா் அங்கு சென்று இறந்து 10 நாட்களான அழுகிய நிலையில் கிடந்த அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றினா். இறந்து கிடந்தவா் பற்றிய எந்த விபரமும் தெரியவில்லை. அப் பெண்ணுக்கு 35 வயது இருக்கும் எனவும் அவா் கழுத்தியில் தாாலிக்கயிறு, காலில் மிஞ்சி அணிந்துள்ளாா். என போலீசாா் தெரிவித்தனா்.
இவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து சடலத்தை இங்கு வந்து போட்டுவிட்டுச் சென்றுள்ளனரா என்பது குறித்து போலீசாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவா் செந்தில் தலைமையிலான மருத்துவக்குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து அதே இடத்திலேயே அந்த சடலத்தைப் பரிசோதனை செய்தனா்.