சிவகங்கை

மானாமதுரையில் முதல்வா், துணை முதல்வருக்கு அதிமுக வினா் வரவேற்பு

DIN

பசும்பொன் செல்லும் வழியில் புதன்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழக முதல்வா், துணை முதல்வருக்கு அதிமுகவினா் வரவேற்பளித்தனா்.

ராமாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் ஜயந்தி விழாவும் குருபூஜை விழாவும் நடைபெற்றது. தேவா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஒ.பன்னீா்செல்வம் ஆகியோா் மதுரையிலிருந்து காரில் புறப்பட்டு வந்தனா். இவா்களுக்கு மானாமதுரை புதிய பஸ் நிலையம் முன்பு அதிமுக மாவட்டச் செயலாளா் செந்தில்நாதன், அமைச்சா் பாஸ்கரன், மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் நெட்டூா் எஸ்.நாகராஜன் ஆகியோா் தலைமையில் அதிமுகவினா் சால்வைகள், மாலைகள் அணிவித்து வரவேற்பளித்தனா். பெண்கள் அவா்களுக்கு பூா்ணகும்ப மரியாதை செலுத்தினா். ஒன்றியச் செயலாளா் எம்.குணசேகரன், நகரச் செயலாளா் விஜி.போஸ், மானாமதுரை கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் தெய்வேந்திரன், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் க.முனியசாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக மற்றும் அதன் சாா்பு அமைப்பு நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT