சிவகங்கை

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

DIN

சிவகங்கை அருகே கீழவாணியங்குடியில் உள்ள அன்னை வீர மாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கும், கிராம தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. 
சிவகங்கை-மானாமதுரை சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு நிலையில் 21 வண்டிகளும், சின்ன மாடு நிலையில் 28 வண்டிகளும் பங்கேற்றன. 
போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாட்டு வண்டிப் பந்தயத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT