சிவகங்கை

காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா

DIN


சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கர்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா காரைக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
சாக்கோட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எம்.சியாமளா குத்துவிளக்கேற்றி வைத்து விழாவை தொடக்கி வைத்தார். வட்டார மருத்துவ அதிகாரி ஆனந்தராஜ், வட்டாரவளர்ச்சி அலுவலர் மாலதி, செஞ்சை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கார்த்திகேயன், ஓ. சிறுவயல் மருத்துவர் சுகந்தி, ஆர்பிஎஸ்கே மருத்துவர் சமீம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் கர்பிணிப் பெண்கள் 120 பேர் கலந்து கொண்டனர்.
வட்டார மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், உதவியாளர்கள் நிகழ்ச்சியை வழி நடத்தினர். இச்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 5 வகையான உணவுகள், தாம்பூலத் தட்டுகள் வழங்கப்பட்டன. முடிவில் சாக்கோட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் சுதா நன்றி கூறினார்.
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணித்திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இவ் விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் மரு. ராகவேந்திரன் தலைமை வகித்தார். இதில்  80 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கான வளையல், பூ, பழங்கள், ஊட்டச் சத்துணவுகள் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து மருத்துவ குழுவினரால் மகப்பேறு கால அறிவுரைகள் வழங்கபட்டன. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT