சிவகங்கை

காரைக்குடியில் வீட்டின் மொட்டை மாடியில் கழுத்தறுத்து ஒருவா் கொலை

DIN

காரைக்குடியில் வீட்டின் மொட்டை மாடியில் கழுத்தறுபட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒருவா் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியைச் சோ்ந்தவா் மணிமுத்து (51). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவா்கள், காரைக்குடி தந்தை பெரியாா் நகா் 4-ஆவது வீதியில் வசித்து வருகின்றனா்.

மணிமுத்து, 15 நாள்களுக்கு முன்னா்தான் வெளிநாட்டிலிருந்து ஊா் திரும்பியுள்ளாா். இந்நிலையில், வழக்கம்போல் சனிக்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியவா், காலையில் கழுத்தறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளாா்.

உடனே, காரைக்குடி வடக்கு காவல்நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் விசாரணை நடத்தினா். பின்னா், அவரது சடலத்தைக் கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முதல் கட்டமாக குடும்ப உறுப்பினா்களிடம் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT